அவதூறு பேச்சு விவகாரம்: சீமானை கைது செய்து விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை


அவதூறு பேச்சு விவகாரம்: சீமானை கைது செய்து விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை
x

சீமானை கைது செய்வதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என ஆணைய துணைத்தலைவர் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சீமானுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீதான விசாரணையின் போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சீமான் இதுவரை கைது செய்யப்படவில்லை என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து சீமனை கைது செய்து விசாரணை செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்த நிலையில், சீமானை கைது செய்வதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என ஆணைய துணைத்தலைவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



Next Story