ஆறு ஈர நிலங்கள் ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்


ஆறு ஈர நிலங்கள் ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
x

ஆறு ஈர நிலங்கள் ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

ஆறு ஈர நிலங்கள் ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாட்டின் கூந்தன்குளம், வேடந்தாங்கல், வெள்ளோடை , உதயமார்த்தாண்டம் ஆகிய பறவைகள் காப்பகங்கள், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்வாழிடக் காப்பகம், வேம்பனூர் ஆகிய 6 ஈர நிலங்கள் ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!

இவற்றுடன் சேர்த்து தமிழ்நாட்டின் ராம்சர் தளங்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து தளங்களும் ராம்சர் அங்கீகாரத்திற்கு தகுதியானவை. இந்த அங்கீகாரத்தை வென்றெடுப்பதற்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!" என்று கூறியுள்ளார்.



Next Story