நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தென்காசியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசி

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அருண்சங்கர், தென்காசி தொகுதி தலைவர் அழகு பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story