ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரகுமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வீரபுத்திரன், மாவட்ட இணை செயலாளர் பசீர், மாவட்ட செயலாளர் மணி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் சட்டையில் கருப்பு பட்டை அணிந்துகொண்டு, ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை பாழ்படுத்தும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் முகைதீன் நன்றி கூறினார்.

ஆலங்குளம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.

ஊரக வளர்ச்சித்துறையில் முறையான திட்டமிடல் இன்றி பணிகளை நடைமுறைப்படுத்தி திட்டங்களை பாழ்படுத்தும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்



Next Story