சேலத்தில் வரும் 30-ம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு


சேலத்தில் வரும் 30-ம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி  அறிவிப்பு
x

சேலத்தில் இரும்பாலை பிரச்சினை தொடர்பாக வரும் 30-ம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கி.வீரமணி அறிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலத்தில் இரும்பாலையை - வெறும் உருக் காலையாக மாற்றியபோதே, திராவிடர் கழகம் போராடியது. அதன் பிறகு தனியார் மயப் பாம்பு புற்றிலிருந்து தலைகாட்டியவுடன் அதனை திராவிடர் கழகம் போராட்டத் தடிமூலம் புற்றுக்குள் தள்ளியது. இப்போது மீண்டும் துணிந்து அது ''அதானி, அம்பானிகளுக்கு'' - கார்ப்பரேட்டு கன முதலாளிகளுக்கு மடை மாற்றம் செய்ய ஆயத்தமாக்கப்படும் அநியாயம் அரங்கேறவிருக்கிறது.

இதனைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசும், நமது முதல்-அமைச்சரும், அத்துணைக் கட்சி அமைப்பினரும் ஓரணியில் நின்று, ஒன்றுபட்டுக் குரல் எழுப்பித் தடுப்பணை எழுப்பியாகவேண்டும். அதற்கு முன்னோட்டமாக 30-ந்தேதி சேலத்தில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் மத்திய அரசின் பணிமனை முன்பு நடத்தும். தடுப்பு நடவடிக்கைக் கண்டனக் குரல் டில்லி வரை கேட்கும் வகையில், அனைத்து பொறுப்பாளர்களும் பிரசாரம், சுவரெழுத்து உள்படச் செய்ய தொடங்குங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story