அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட செயலாளர் அன்பரசு, தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணை தலைவர் கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் நடைபெறும் எம்.ஆர்.பி. செவிலியர்களின் முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், எம்.ஆர்.பி. செவிலியர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையை கண்டித்தும், தமிழக அரசு செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

1 More update

Next Story