பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரூசோ வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட துணைத்தலைவர் ஜீவரத்தினம், மாவட்ட துணை செயலாளர் மாரியம்மாள், மாவட்ட இணை செயலாளர் தேவிகலா மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





