ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது உதவி இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் உதவி செயற்பொறியாளர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர் நிலைகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களையும் மற்றும் வளர்ச்சித்துறையின் அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளான தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்கிட வேண்டும். தூய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். கணினி இயக்குபவர்களுக்கு உண்டான பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலுத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story