தேவர் ஜெயந்தி விழா: ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை


தேவர் ஜெயந்தி விழா: ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
x

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வருகிற 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனையொட்டி பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.




Next Story