திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தர்களால், கோவிலில் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாக திருவிழா களைகட்டியுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தர்களால், கோவிலில் கூட்டம் அலைமோதியது.
கடற்கரை பகுதியில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், சண்முக விலாச மண்டபம் வழியாக உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது கோவில் அலுவலர்கள் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் பொது வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story