திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
x

விடுமுறை நாளை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆந்திர, கர்நாடகா அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கூட்டமாக திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து செல்வர்.

இங்கு விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

காத்திருந்து தரிசனம்

இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வெளி மாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்கள்.

இதனால் பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


Next Story