திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. மேலும் இந்த விடுமுறை தினத்தோடு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட அரசு விடுமுறைகளும் இருந்தது. இந்த விடுமுறை தினங்களில் தினசரி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாளை (திங்கள் கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பவுர்ணமி தினமான இன்று திருச்செந்தூர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பவுர்ணமி தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.


Next Story