தர்மபுரி நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு

தர்மபுரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சித்ரா சுகுமார் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சி துணை ஆணையாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து மேட்டூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த புவனேஸ்வரன் என்ற அண்ணாமலை இடமாற்றம் செய்யப்பட்டு தர்மபுரி நகராட்சி ஆணையாளராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சி துணை ஆணையாளராக செல்லும் சித்ரா சுகுமாருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





