மொரப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி மக்கள் நல பணியாளர் பலி


மொரப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி மக்கள் நல பணியாளர் பலி
x
தினத்தந்தி 4 Aug 2023 12:30 AM IST (Updated: 4 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள செட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 51). மக்கள் நல பணியாளர். இவர் நேற்று முன்தினம் இரவு மொரப்பூரில் இருந்து செட்ரப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொரப்பூர் பனந்தோப்பு ஏரி அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி பாரதி மொரப்பூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story