தொப்பூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி


தொப்பூர் அருகே  குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
x

தொப்பூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே ஈசல்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு மஞ்சுநாதன் (6) என்ற மகனும், திவ்யதர்ஷினி (2), அனுபிரியா (1) என்ற 2 மகள்களும் இருந்தனர்.

இந்த நிலையில் மகன், மகள்கள் தொப்பூர் அருகே ஈசல்பட்டியில் தாய் லலிதா வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து 3 பேரும் வீட்டின் அருகே பெருமாள் என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த குட்டை நீரில் குளிக்க சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மஞ்சுநாதன் குட்டை நீரில் மூழ்கினார். வெகு நேரமாகியும் அண்ணன் வெளியே வராததால் சிறுமிகள் 2 பேரும் சத்தம் போட்டனர். இதை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குட்டையில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மஞ்சுநாதனை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தொப்பூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story