மோகனூர் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி


மோகனூர் அருகே  வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
x

மோகனூர் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள லத்துவாடியை சேர்ந்தவர் மோகன் (வயது 58). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அணியாபுரம் சென்று விட்டு வீடு நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோகன் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த மோகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மகள் சங்கீதா மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story