தொப்பூர் அருகே லாரி டயரில் சிக்கி மெக்கானிக் பலி


தொப்பூர் அருகே  லாரி டயரில் சிக்கி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:47 PM GMT)

தொப்பூர் அருகே லாரி டயரில் சிக்கி மெக்கானிக் பலி

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே லாரி டயரில் சிக்கி மெக்கானிக் பலியானார்.

மெக்கானிக்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தொம்பரகாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ரவிக்குமார் (வயது 21). மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் தொம்பரகாம்பட்டியில் இருந்து குறிஞ்சி நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது தொப்பூர் அருகே தர்மபுரி- சேலம் தேசிய நெஞ்சாலையில் சென்றபோது அய்யனாரப்பன் கோவில் அருகே பின்னால் வந்த லாரி ஒன்று ரவிக்குமார் ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விசாரணை

இந்த விபத்தில் கீழே விழுந்த ரவிக்குமார் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவிக்குமார் நேற்று காலை இறந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் லாரி டயரில் சிக்கி மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story