வாகனம் மோதி தொழிலாளி சாவு


வாகனம் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 10:37 AM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

வெப்படை அருகே உள்ள சின்னார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் வெப்படையில் இருந்து சின்னார் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் பிரகாஷ் வெப்படை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.


Next Story