வாகனம் மோதி வாலிபர் பலி

மத்திகிரி:
ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே ஆனேக்கல்- ஓசூர் சாலையில் கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்து. இதில் பலத்த காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா மத்திகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





