வாகனம் மோதி தொழிலாளி சாவு


வாகனம் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சின்னமுதலைபட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று பெங்களூரு- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story