`தினத்தந்தி' செய்தி எதிரொலி:தோகைமலையில் மீண்டும் தொடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை


`தினத்தந்தி செய்தி எதிரொலி:தோகைமலையில் மீண்டும் தொடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை
x

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தோகைமலையில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலையில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறையும், டிரைவர்கள் தங்குவதற்காக இட வசதி இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கும் இடமும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்குவதற்காக இடமும் தயார் செய்து கொடுத்தனர். இதையடுத்து தோகைமலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story