கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x

தொற்று ஏற்பட்டுள்ள பன்றிப்பண்ணையை சுற்றி இருக்கும் ஒரு கிலோ மீட்டர் பகுதி தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு முதலாமடா பகுதியில் தனியார் பன்றிப் பண்ணை அமைந்துள்ளது. இங்கு தொடர்ச்சியாக பன்றிகள் உயிரிழந்ததையடுத்து, அங்குள்ள பன்றிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட பன்றிப்பண்ணையை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதி தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 10 கி.மீ. சுற்றுளவில் உள்ள பகுதிகளில் பண்ணைகளில் பன்றிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், பன்றிப் பண்ணைகளில் பணியாற்றுபவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடல்நிலை பரிசோதனை செய்யப்பட உள்ளது. நோய் கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story