புகழூர் நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கல்


புகழூர் நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கல்
x

புகழூர் நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

கரூர்

புகழூர் நகராட்சியினை மாசற்ற தூய்மையான நகராட்சியாக உருவாக்கிட, நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் வீட்டுக் கழிவு பொருட்களை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுப்பதற்கு வீட்டிற்கு 2 பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தினையும், நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டினை புகழூர் நகராட்சி பகுதிகளில் முற்றுலுமாக ஒழித்து பசுமையான நகராட்சியாக உருவாக்கிட பொதுமக்களின் பங்களிப்போடு வீட்டிற்கு 2 மஞ்சள் பைகளை வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைக்கும் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இந்த திட்டத்தினை 2-வது வார்டு பகுதியில் புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி கமிஷனர் கனிராஜ், நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story