ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் - ஓபிஎஸ் அறிவிப்பு


ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் - ஓபிஎஸ் அறிவிப்பு
x

ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மாநில மாநாடு நடத்தப்படுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 01-07-2023 சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story