தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

ஈரோடு,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. 575 வாக்குறுதிகளை கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த அம்மா ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக், அம்மா சிமெண்ட் உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிவிட்டது.

இந்த கோபம் ஈரோட்டில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடத்தேர்தலில் பிரதிபலிக்கும். ஈரோட்டில் பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க தயாராகி விட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர் கே. எஸ்.தென்னரசு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story