தென்காசியில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


தென்காசியில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x

நீட் தேர்வை ரத்து செய்யக்கோாி தென்காசியில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தென்காசி

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து கவர்னர் பேசியதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சென்னை எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம். எல். ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணராஜா வரவேற்றுப் பேசினார். மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் தென்காசி நகரச் செயலாளரும் நகர் மன்ற தலைவருமான சாதிர், நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன், மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் மாலை வரை நடைபெற்றது.

1 More update

Related Tags :
Next Story