ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம்...!


ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம்...!
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது.

பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய 5 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.


Next Story