பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 'கல்வியும், காவலும்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில், அந்தந்த போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு கல்வியும், காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகளும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதலும், ஏரி, குளம், ஆறு போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகளும், தற்கொலைகள் போன்றவை குறித்தும், சாதிய பாகுபாடுகளை ஒழித்தல் குறித்தும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு காவல் துறையில் இயங்கும் கைரேகை பிரிவு மோப்ப நாய்ப்படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு ஆகிய பிரிவுகள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும் விழிப்புணர்வினை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story