இலங்கையில் இருந்து மேலும் 8 பேர், அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்


இலங்கையில் இருந்து மேலும் 8 பேர்,  அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்
x

இலங்கையில் இருந்து மேலும் 8 ேபர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

இலங்கையில் இருந்து மேலும் 8 ேபர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர்.

தனுஷ்கோடி கடற்கரை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு வாழ முடியாமல் அகதிகளாக தமிழகத்துக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் ஏற்கனவே 141 பேர், ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து ஒரு படகில், 3 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 8 பேர் நேற்று காலை தனுஷ்கோடி பாலம் கடற்கரையில் வந்திறங்கினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடலோர போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடற்கரையில் நின்றிருந்த அகதிகள் 8 பேரையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

8 பேர் வந்தனர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கார்த்திக்(வயது 26), ரத்தினம் ரஞ்சித்(59), தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(54), யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் கீதா குமாரி(27), இவரது குழந்தைகள் துவாரகன்(6), நிரஞ்சன்(2), திரிகடுமலை பகுதியைச் சேர்ந்த ராமண தபலேந்திர குமரி (32), மித்ரா(2) என தெரியவந்தது.

இவர்களில் குழந்தைகளை தவிர மற்றவர்கள் ஏற்கனவே தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கி இருந்தவர்கள் என்பதும், சில வருடங்களுக்கு முன்பு விமானம் மூலம் இலங்கைக்கு சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

இன்னும் பலர் வருவார்கள்

போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, தற்போது இலங்கையில் அரிசி, காய்கறி, பருப்பு என அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. வேலைவாய்ப்பும் இல்லை. எனவே வேறு வழியின்றி தமிழகம் வந்துள்ளோம், என தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் தமிழகம் வரவாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.

தனுஷ்கோடிக்கு படகில் தப்பி வருவதற்கு இலங்கையை சேர்ந்த படகோட்டிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 8 பேருக்கு சேர்த்து, இலங்கை பணம் ரூ.8 லட்சம் கொடுத்ததாகவும், தங்களை அவர்கள் அழைத்து வந்து தனுஷ்கோடியில் விட்டுவிட்டு, மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றுவிட்டனர் எனவும் அகதிகள் தெரிவித்தனர்.


Next Story