அரசு பஸ் மோதி முதியவர் பலி

திண்டிவனத்தில் அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திண்டிவனம்
திண்டிவனம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் சகாதேவன்(வயது 63). இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் திண்டிவனம்-சென்னை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சகாதேவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





