மின்வாரிய வணிக ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை


மின்வாரிய வணிக ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை
x

ஆரணியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் மின்வாரிய வணிக ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எம்.பி.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரபு (வயது 37). இவர் ஆரணி மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் ஆகாத ஏக்கத்தில், வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயபிரபு கடந்த 15-ந்தேதி அலுவலகம் எதிரே உள்ள திருமண மண்டபத்தின் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைபார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன்போலீஸ் நிலையத்தில் ஜெயபிரபுவின் தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story