அனுமதியின்றி மின்சார இணைப்பு: மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்


அனுமதியின்றி மின்சார இணைப்பு: மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்
x

அனுமதியின்றி மின்சார இணைப்பு கொடுத்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது வீட்டிற்கு மின்சார இணைப்பு வசதி கோரி அப்பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் வடிவேலுவின் வீட்டிற்கு மின்கம்பியாளர் முருகேசன் மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறார். இதற்காக அவரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வின் போது, அந்த மின்சார இணைப்புக்கு உரிய அனுமதி இல்லாமல் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின் கம்பியாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Next Story