தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டுமின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டுமின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டுமின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் வட்ட கிளை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின் ஊழியர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி போனஸ் 20 சதவீதம் சட்டப்படி அனைத்து பொறியாளர்களும், ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். இ-டெண்டர் முறையினை ரத்து செய்திட வேண்டும். கேங்க்மேன் பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு, சட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், மின் வாரியமும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி காலை 9 மணிக்கு பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பும், மாலை 5 மணிக்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story