என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வேலை கிடைக்காததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

வேலூர் சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் அஜித் குமார் (வயது 22). என்ஜினீயரான இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த வேலூர் தெற்கு போலீசார் அஜித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story