என்ஜினீயர், மூதாட்டி தற்கொலை


என்ஜினீயர், மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:46 PM GMT)

தக்கலை அருகே வெவ்வேறு சம்வபங்களில் என்ஜினீயர், மூதாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே வெவ்வேறு சம்வபங்களில் என்ஜினீயர், மூதாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜினீயர்

தக்கலை அருகே உள்ள பண்டாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது45), டிப்ளமோ என்ஜினீயர். இவருக்கு புனிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்றார்.

இதனால் மனவேதனையடைந்த சந்திரமோகன் சில மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்த பின்பு அவரது அண்ணன் மரியவளன் (49) வீட்டில் வசித்து வந்தார்.

விஷம் குடித்தார்

மேலும், சந்திரமோகன் சரியாக வேலைக்கு செல்லாமல் மிகவும் சோகத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது அண்ணனின் தென்னந்தோப்பில் வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்து ெகாண்டிருந்த போது மதியம் விஷம்குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மூதாட்டி

தக்கலை அருகே உள்ள அப்பட்டுவிளை, எழுத்தன்கோட்டு கோணத்தை சேர்ந்தவர் மத்தியாஸ் (69), தொழிலாளி. இவரது மனைவி மேரி இந்திரா (63). இவர்களது மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்தியாஸ் விபத்தில் சிக்கியதில் அவரது கை முறிந்தது. அதன்பின்பு அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த இந்திரா வீட்டின் வெளிபுறத்தில் உள்ள சன்சைடு கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்தியாஸ் தக்கலை போலீசுக்கு தகவல் கூறினார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story