சுய லாபத்திற்காக, ஓபிஎஸ் உடன் இணைய மாட்டோம் என்று ஈபிஎஸ் கூறுகிறார் - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி


சுய லாபத்திற்காக, ஓபிஎஸ் உடன் இணைய மாட்டோம் என்று ஈபிஎஸ் கூறுகிறார் - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
x

சுய லாபத்திற்காக, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

சென்னை,

சென்னையில் ராயப்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்விகளையே பெற்று வருகிறார். சுய லாபத்திற்காக, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். எடப்பாடி பழனிசாமியின் முடிவு குறித்து ஓ.பி.எஸ் வருத்தப்பட்டார். அதிமுகவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி இந்த முடிவு எடுத்துள்ளார்.

அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் உட்பட எல்லோரும் விரும்பினார்கள். ஆனால் கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவே நூறு சதவீதம் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சாதி இல்லாத கட்சியாக அதிமுகவை வழிநடத்தினர். எடப்பாடி பழனசாமி ஒரு போதும் பொது செயலாளர் ஆக முடியாது. காலம் வரும் போது நிச்சயம் கட்சி தலைமை அலுவலகத்துக்கு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story