கல்வராயன்மலையில் கரும்பு வயலில் பதுக்கிய 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில்    கரும்பு வயலில் பதுக்கிய 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

கல்வராயன்மலையில் கரும்பு வயலில் பதுக்கிய 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கரியாலூர் அடுத்த வேங்கோடு கிராமத்தில் உள்ள கரும்பு வயலில் பேரல்களில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற கரும்பு வயலில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கரும்பு வயலில் 11 பேரல்களில் 2,200 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேரல்களில் இருந்த சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்ததோடு, அங்கு சாராய ஊறலை அமைத்த நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.


Next Story