ஈரோடு இடைத்தேர்தல்: தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்...!


ஈரோடு இடைத்தேர்தல்: தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்...!
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னிலையில் ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று 2-ம் நாள் வேட்புமனுத்தாக்கல் நிறைவில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.


Next Story