ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி: முதல்- அமைச்சர் அறிவிப்பு


ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி: முதல்- அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2023 1:40 PM GMT (Updated: 17 March 2023 3:38 PM GMT)

அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அலுவலர் மேஜர்.ஏ.ஜெயந்த் உள்பட 2 ராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் 16-ந்தேதி (நேற்று முன்தினம்) உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து இன்று (நேற்று) காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சென்று, தாய்நாட்டை காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தினேன்.

ரூ.20 லட்சம் நிதி

தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர். ஏ.ஜெயந்தின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story