கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் அதிகாரி மயங்கி விழுந்து சாவு


கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் அதிகாரி மயங்கி விழுந்து சாவு
x

கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 63). மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வசித்து வந்தார். இவருடைய மனைவி ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்காக நேற்று காலை திருச்சி கோர்ட்டுக்கு வந்திருந்த தியாகராஜ், அங்கு திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த அவருடைய மனைவி அதிர்ச்சியுடன் கோர்ட்டில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story