மயங்கி கிடந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு


மயங்கி கிடந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 26 May 2023 1:44 AM IST (Updated: 26 May 2023 2:50 PM IST)
t-max-icont-min-icon

மயங்கி கிடந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

திருச்சி

லால்குடி:

லால்குடியை அடுத்த அரியூர் கிராமத்தில் உள்ள நடுத்தெருைவ சேர்ந்தவர் ரமேஷ்(வயது 45). முன்னாள் ராணுவ வீரரான இவர் கொப்பாவளி பகுதியில் நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதைக்கண்டவர்கள் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பவத்தன்று அவர் சிலருடன் தகராறில் ஈடுபட்டதும், அப்போது அவர் தாக்கப்பட்டு வயல் பகுதியில் விழுந்ததும், பின்னர் அவர் சாலை பகுதிக்கு வந்தபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியதாகவும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தாக்கப்பட்டதால் இறந்தாரா? அல்லது வாகனம் மோதியதால் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story