சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் - டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு


சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் - டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு
x

விமான நிலையத்தின் விரிவாக்க முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக 2,400 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் சஞ்சீவ் குமார், விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த பணிகள் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் நிறைவடையும் என்றும், அதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் விரிவாக்க முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story