காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை காலம் நீட்டிப்பு


காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை காலம் நீட்டிப்பு
x

காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஶ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மேலாண்மை நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். ஓராண்டு படிப்பிற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி : +2, வயது வரம்பு:17 வயது (1.8.2023) அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பெற்றோர் / பாதுகாவலருடன் மேலாண்மை நிலையத்திற்கு நாளை மாலை 5 மணிக்குள் நேரில் வருகை தர கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story