ஈரோடு-நெல்லை ரெயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு


ஈரோடு-நெல்லை ரெயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு
x

ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

ஈரோடு,

ஈரோடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

அதன்படி நாளை ஈரோட்டில் இருந்து புறப்படும் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும். இதன் முதல் சேவையை ஈரோடு ரெயில் நிலையத்தில் மதியம் 2 மணிக்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இந்த புதிய நீட்டிப்பு சேவைக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரெயில் (16845) தினந்தோறும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் (16846) செங்கோட்டையிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு ஈரோடு சென்று சேரும். இந்த ரயில்கள் திருநெல்வேலி - செங்கோட்டை பிரிவில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story