சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை


சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை
x

சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை

திருவாரூர்

மன்னார்குடி

மன்னார்குடி அருகே சொத்து தகராறில் விவசாயியை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

சொத்து தகராறு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது56). விவசாயி. இவருடைய மனைவி வள்ளி(50). இவர்களின் மகன் குமரேசன் (29). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த குமரேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கு ஆரோக்கியமேரி என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

குமரேசன் தனது தந்தை ரவியிடம் சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டு வந்தார்.

இதனால் தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குமரேசனின் தந்தையும், தாயும் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு சொத்து தொடர்பாக குமரேசனுக்கும் அவருடைய தந்தை ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கட்டையால் அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த குமரேசன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனது தந்தை ரவியை சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது தாய் வள்ளியும் தாக்கப்பட்டார். தாக்குதலில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வள்ளிைய அக்கம்பக்கத்தினர் தளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கைது

இதுகுறித்து தகவலறிந்த பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story