விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

மேல்மலையனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

செஞ்சி,

மேல்மலையனூர் அருகே மேல்வயலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி புஷ்பா (55). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த புஷ்பா அதே கிராமத்தில் உள்ள தனது தாய்வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து அவரை வீட்டுக்கு வருமாறு வேலு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு புஷ்பா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த வேலு விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வேலு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story