கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி தனசேகர் (வயது 51). இவருக்கு திருமணமாகி சுலோச்சனா (47) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 5-ந்தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து விவசாயி தனசேகர் குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜய் (வயது 18). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வேலை தேடி வந்ததாத இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று பயன் இல்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை நெய்வேலி ஏரிக்கு சென்றபோது வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அந்த வழியே சென்றவர்கள் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் வளர்மதி ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story