காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி


காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
x

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தாமல் கிராமத்தில் தன்னுடைய வயலுக்கு சென்று பார்த்துவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

தாமல் சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது. பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உயிரிழந்த ராஜேந்திரனின் மகன் சுதாகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story