விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2023 2:00 AM IST (Updated: 13 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

எருமாடு பஜாரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

பந்தலூர் அருகே எருமாடு பஜாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கைவச நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும், பச்சை தேயிலை கிலோவுக்கு 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்-ய வேண்டும், மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க நிர்வாகி பிலீப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யோகண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுதர்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story