விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு, விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர் கனமழையால் சேதமடைந்த சம்பா தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிறுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நாகராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story